ஆன்மிகம்
ஆனி மாத அமாவாசையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆனி மாத அமாவாசையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2021-07-10 03:45 GMT   |   Update On 2021-07-10 03:45 GMT
பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி உற்சவரான பெருந்தேவி சமேத வரதராஜபெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சரநாராயணபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்தியான சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலிலும் ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது உற்சவரான பெருந்தேவி சமேத வரதராஜபெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் நெல்லிக்குப்பம் ருக்மணி, சத்யபாமா சமேத வேணு கோபால சுவாமி கோவிலில் நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் வேணுகோபாலசுவாமி வெண்ணைத்தாழி கண்ணன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News