ஆன்மிகம்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 70 நாட்களாக மூடப்பட்டு இருந்த கோவில்கள் கடந்த 5-ந்தேதி முதல் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டு, வருகின்றனர்.
அந்த வகையில் ஊரடங்கு தளர்வில் கோவில் திறக்கப்பட்ட பின்னர் முதல் பிரதோஷ பூஜை நேற்று கோவில்களில் நடைபெற்றது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் ஊரடங்கு தளர்வில் கோவில் திறக்கப்பட்ட பின்னர் முதல் பிரதோஷ பூஜை நேற்று கோவில்களில் நடைபெற்றது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.