ஆன்மிகம்
மேட்டுப்பாளையம் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பழத்தோட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பழத்தோட்டத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி கிருத்திகையை முன்னிட்டு 14 வகையான பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
இதையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.