ஆன்மிகம்
சோலைமலை முருகன்

சோலைமலை முருகன் கோவிலில் சஷ்டி பூஜை

Published On 2021-06-17 08:50 GMT   |   Update On 2021-06-17 08:50 GMT
முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் ஆனி மாத சஷ்டி பூஜை நடந்தது. கொரோனா தடை உத்தரவு காரணத்தால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
மதுரை அருகே அழகர்மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் ஆனி மாத சஷ்டி பூஜை நடந்தது.

இதில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதைதொடர்ந்து மூலவர் சுவாமி, வித்தகவிநாயகர் மற்றும் ஆதிவேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகள் அரசு வழிகாட்டுதல்படி நடந்தது.

கொரோனா தடை உத்தரவு காரணத்தால் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News