ஆன்மிகம்
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி மாத கார்த்திகை பூஜைகள் நடந்தன.
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி மாத கார்த்திகை பூஜைகள் நடந்தன. இதையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.
முன்னதாக அங்குள்ள வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதிகளிலும் பூஜைகள் நடந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
முன்னதாக அங்குள்ள வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதிகளிலும் பூஜைகள் நடந்தன. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.