ஆன்மிகம்
கெங்கை அம்மன்

பானங்கல்லில் உள்ள கெங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-06-09 04:51 GMT   |   Update On 2021-06-09 04:51 GMT
சித்தூர் மாவட்டம் பானங்கல்லில் உள்ள கெங்கை அம்மனுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து அந்த அபிஷேக நீரை பானங்கல் பகுதி முழுவதும் தெளித்தனர்.

சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள பானங்கல் பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பானங்கல்லில் உள்ள கெங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் முழுவதுமாக விடுபட்டு, சகஜ நிலைக்கு மீண்டும் திரும்ப வேண்டி கெங்கை அம்மனுக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து அந்த அபிஷேக நீரை பானங்கல் பகுதி முழுவதும் தெளித்தனர்.
Tags:    

Similar News