ஆன்மிகம்
குமாரபாளையம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா
குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் சாமி கையில் வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஊரடங்கு, கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் வீடு, வீடாக சென்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.