ஆன்மிகம்
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த வழிபாடு

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த வழிபாடு

Published On 2021-05-13 07:50 GMT   |   Update On 2021-05-13 07:50 GMT
சிங்காரவேலர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் நடந்த இந்த விழாவில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் தீவிரமாகி வருவதால் தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டது. இந்தநிலையில் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று சித்திரை மாத கார்த்திகையை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

சிங்காரவேலர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் நடந்த இந்த விழாவில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவுறுத்தல்படி, இந்த வழிபாடுகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றன.

இதே போல் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுக கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

பி்ன்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர்கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணிய சாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது.

மேலும் தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகை வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
Tags:    

Similar News