ஆன்மிகம்
முருகபெருமானுக்கு அபிஷேகம்

திருமலைக்கேணி சுப்பிரமணிய சாமி கோவிலில் அமாவாசை பூஜை

Published On 2021-05-12 05:55 GMT   |   Update On 2021-05-12 05:55 GMT
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சாமி கோவிலில் முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், சந்தனம், விபூதி, தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சாமி கோவிலில் சித்திரை மாத சர்வ அமாவாசை பூஜை நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், சந்தனம், விபூதி, தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார். இதேபோல் அருகே உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும், அமாவாசையையொட்டி பூஜைகள் நடந்தது.
Tags:    

Similar News