ஆன்மிகம்
ஆரல்வாய்மொழி நாராயணசாமி நிழல் தாங்கல் திருவிழா
ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் நாராயணசாமி நிழல் தாங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் நாராயணசாமி நிழல் தாங்கல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் அய்யாவுக்கு பணிவிடை, மாலை 4 மணி முதல் திருஏடு வாசிப்பு, இரவு அன்னதர்மம் போன்றவை நடந்தது.
12-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பும் தொடர்ந்து திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது.
விழாவில் நேற்று மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, 2 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகம் போன்றவை நடந்தது. 8 மணிக்கு அய்யா அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி நையாண்டி மேளம், செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுப்பிரமணியபுரம் நாராயணசாமி திருநிழல் தாங்கல் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
12-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பும் தொடர்ந்து திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது.
விழாவில் நேற்று மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, 2 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகம் போன்றவை நடந்தது. 8 மணிக்கு அய்யா அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி நையாண்டி மேளம், செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுப்பிரமணியபுரம் நாராயணசாமி திருநிழல் தாங்கல் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.