ஆன்மிகம்
முத்தாரம்மன் கோவில் கொடை விழா

ஆரல்வாய்மொழி முத்தாரம்மன் கோவில் கொடை விழா

Published On 2021-03-02 05:43 GMT   |   Update On 2021-03-02 05:43 GMT
ஆரல்வாய்மொழி வடக்கூர் நயினார் குலசேகர விநாயகர் கோவிலுக்கு உட்பட்ட முத்தாரம்மன் கோவில் கொடை விழா தொடங்கியது. நேற்று இரவு நையாண்டி மேளத்துடன் குடி அழைப்பு, வில்லிசை, அம்மனுக்கு மாகாப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி வடக்கூர் நயினார் குலசேகர விநாயகர் கோவிலுக்கு உட்பட்ட முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. நேற்று இரவு நையாண்டி மேளத்துடன் குடி அழைப்பு, வில்லிசை, அம்மனுக்கு மாகாப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு நயினார் குலசேகர விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு முத்தாரம்மன் கோவிலை வந்தடைதல், 11 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் பொங்கல் வழிபாடு, இரவு 10 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் வீதி உலா வருதல் போன்றவை நடக்கிறது.

நாளை (புதன்கிழமை) காலையில் வில்லிசை, மதியம் மணிக்கு அலங்கார தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், அம்மன் சிங்க வாகனத்தில் ஊர் சுற்றி வருதல் ஆகியவை நடைபெறும்.
Tags:    

Similar News