ஆன்மிகம்
73 நாயன்மார்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 73 நாயன்மார்களுடன் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரசாமி வீதி உலா

Published On 2021-02-23 07:52 GMT   |   Update On 2021-02-23 07:52 GMT
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மட்டும் தொகையடியார் சேர்த்து 73 நாயன்மார்கள் உள்ளனர். இந்த கோவிலில் பஞ்சமூர்த்திகள் 73 நாயன்மார்கள் உடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரசாமி எழுந்தருளி வீதி உலா நடந்தது.
வேதாரண்யத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடைய பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி தந்த இடம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கோவில் திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு. அனைத்து சிவன் கோவிலிலும் 63 நாயன்மார்கள் இருப்பது வழக்கம்.

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மட்டும் தொகையடியார் சேர்த்து 73 நாயன்மார்கள் உள்ளனர். பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான பஞ்சமூர்த்திகள் 73 நாயன்மார்கள் உடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரசாமி எழுந்தருளி வீதி உலா நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News