ஆன்மிகம்
எருமப்பட்டியில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
எருமப்பட்டி அண்ணா புறநகரில் உள்ள ஸ்ரீ யோக விநாயகர் கோவில் விழாவில் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து அக்னி மாரியம்மன் கோவிலில் இருந்து கடைவீதி, ராஜவீதி வழியாக ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர்.
எருமப்பட்டி அண்ணா புறநகரில் உள்ள ஸ்ரீ யோக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து அக்னி மாரியம்மன் கோவிலில் இருந்து கடைவீதி, ராஜவீதி வழியாக ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர்.
இதையடுத்து சாமிக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதையடுத்து சாமிக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.