ஆன்மிகம்
மாணவ, மாணவிகள் வெற்றிபெற உத்தமர்கோவிலில் சிறப்பு ஹோமம்

மாணவ, மாணவிகள் வெற்றிபெற உத்தமர்கோவிலில் சிறப்பு ஹோமம்

Published On 2021-02-23 04:52 GMT   |   Update On 2021-02-23 04:52 GMT
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் அரசு பொது தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் வெற்றி பெற வேண்டி ஞானசரஸ்வதிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் அரசு பொது தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் வெற்றி பெற வேண்டி ஞானசரஸ்வதிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. முன்னதாக  ஞானசரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தில் எழுந்தருளினார்.

இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. ஞானசரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அரசு பொதுத்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து கலந்துகொண்டு ஞானசரஸ்வதிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
Tags:    

Similar News