ஆன்மிகம்
ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவில் வழிபாடு

ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவில் வழிபாடு

Published On 2021-02-21 06:28 GMT   |   Update On 2021-02-21 06:28 GMT
ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக சாமிக்கு பால், தயிர், சந்தனம், பழங்கள் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு வழிபாட்டில் ஆலங்குளம், பாரதி நகர், அண்ணா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News