ஆன்மிகம்
புவனகிரி அருகே காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

புவனகிரி அருகே காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2021-02-19 07:06 GMT   |   Update On 2021-02-19 07:06 GMT
வரதராஜ பெருமாள் கோவில் குளக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புவனகிரி அருகே உள்ள வடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பல்லாரி சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார். இதையடுத்து அந்த சமாதியை கோவிலாக அமைத்து கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இங்கு ஆண்டு தோறும் காவடி உற்சவம் நடைபெறும். அந்த வகையில் நேற்று காவடி உற்சவம் நடைபெற்றது. இதில் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் குளக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News