ஆன்மிகம்
நாகூர் சூரிமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நாகூர் சூரிமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Published On 2021-02-08 06:51 GMT   |   Update On 2021-02-08 06:51 GMT
நாகூரில் சூரிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.
நாகூரில் சூரிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் 23-ந் நாள் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

முன்னதாக காலை மாரியம்மனுக்கு ருத்ர ஹோமமும், அபிஷேக ஆராதனையும் நடந்தது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News