ஆன்மிகம்
நெல்லிக்குப்பம் அருகே வில்லுகட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம் அருகே வில்லுகட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-01-27 04:36 GMT   |   Update On 2021-01-27 04:36 GMT
நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூரணி புஷ்கலா சமேத ஸ்ரீ வில்லுகட்டி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூரணி புஷ்கலா சமேத ஸ்ரீ வில்லுகட்டி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

பின்னர் நவக்கிரக ஹோமம், கோ பூஜை, முதல் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.  இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. இதையடுத்து யாக சாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News