ஆன்மிகம்
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்
தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று இரவு சிறப்பு யாகம் நடந்தது.
தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று இரவு சிறப்பு யாகம் நடந்தது. இதையொட்டி காலபைரவர் மற்றும் பாலவிநாயகருக்கு நெய், அரிசி மாவு, திரவிய பொடி, சந்தனம், கரும்புச்சாறு ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது.
இதையடுத்து காலபைரவர் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.