ஆன்மிகம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

Published On 2020-12-08 03:47 GMT   |   Update On 2020-12-08 03:47 GMT
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை என்.ஜி.ஓ. நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை என்.ஜி.ஓ. நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் சங்குகளில் நீர் நிரப்பி யாக பூஜைகள் நடந்தன. 

அதைத்தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News