ஆன்மிகம்
விநாயகர்

சோலைமலையில் சங்கடஹர சதுர்த்தி விழா

Published On 2020-12-04 06:54 GMT   |   Update On 2020-12-04 06:54 GMT
அழகர்கோவில் மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.
அழகர்கோவில் மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி வித்தக விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. 

இதையொட்டி அருகம்புல், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூ மாலைகளால் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News