ஆன்மிகம்
நத்தம் கைலாசநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேக விழா
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில், கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேக விழா நடந்தது.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில், கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேக விழா நடந்தது. இதையொட்டி மூலவர் கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக உலக நன்மைக் காக கோவில் வளாகத்தில் தாமரை வடிவில் 1,008 சங்குகள் வைக்கப்பட்டு அவை வில்வ இலைகள், மலர்களால் அலங்கரிங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 108 மூலிகைகளால் ஆன பொருட்கள் மூலம் சிறப்பு யாகம் நடந் தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க இந்த யாகம் நடந்தது. விழாவில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.