ஆன்மிகம்
தீபம்

காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை தெப்பக்குளத்தை சுற்றி 1008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி

Published On 2020-11-28 08:08 GMT   |   Update On 2020-11-28 08:08 GMT
கன்னியாகுமரி சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றிலும் 1,008 சகஸ்ர தீபம் ஏற்றப்படுகிறது.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு கோவில் மற்றும் தெப்பக்குளத்தை சுற்றிலும் 1,008 சகஸ்ர தீபம் ஏற்றப்படுகிறது. 

முன்னதாக கோவிலில் சாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் சங்கத்தை சேர்ந்த நாகராஜன், சுந்தர், சுபாஷ், லட்சுமணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News