ஆன்மிகம்
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

Published On 2020-11-24 09:37 GMT   |   Update On 2020-11-24 09:37 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. 

முன்னதாக காலை 10 மணிக்கு கலச பூஜை, 108 சங்கு பூஜை நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு விசேஷ திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு மூல, வேத மந்திரங்கள் முழங்க ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. அதையடுத்து கலசங்களை குருக்கள் ஆலயத்தை சுற்றி கொண்டு வந்தனர். 

அதைத்தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு கலச அபிஷேகம் மற்றும் 108 சங்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பெரியநாயகிக்கும் கலச அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News