ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது எடுத்த படம்.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

Published On 2020-11-23 08:06 GMT   |   Update On 2020-11-23 08:06 GMT
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக் கான பக்தர்கள் வருகை தருவர். அது மட்டுமின்றி சுபமுகூர்த்தம், மாதபிறப்பு, மாத கார்த்திகை, வார விடுமுறை, பள்ளி விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 20-ந்தேதி கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து நேற்று அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்றனர். பின்னர் அவர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பழனி அடிவாரம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Tags:    

Similar News