ஆன்மிகம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று கார்த்திகை சோமவாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். பூதலூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். பூதலூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.