ஆன்மிகம்
தா.பேட்டையில் பெரியமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

தா.பேட்டையில் பெரியமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-11-16 04:34 GMT   |   Update On 2020-11-16 04:34 GMT
தா.பேட்டை பிள்ளாதுறையில் பெரிய மாரியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம விநாயகர், பெரியமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தா.பேட்டை பிள்ளாதுறையில் பெரிய மாரியம்மன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம விநாயகர், பெரியமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து பெரியமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

அப்போது பக்தர்கள் நலமுடன் வாழவும் மழை வேண்டியும், விவசாயம், செழிக்கவும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் கூட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதே போன்று முசிறி, தா.பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
Tags:    

Similar News