ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

காரைக்கால் விழிதியூர் சந்தைவெளி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

Published On 2020-11-12 04:01 GMT   |   Update On 2020-11-12 04:01 GMT
காரைக்காலை அடுத்த விழிதியூர் கிராமத்தில், புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, சந்தைவெளி மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காரைக்காலை அடுத்த விழிதியூர் கிராமத்தில், புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, சந்தைவெளி மாரியம்மன் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில், முதல்-அமைச்சர் நாராயணசாமி, வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சிவசங்கரன், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கரன், திருநள்ளாறு கொம்யூன் முன்னாள் தலைவர் சிங்காரவேலு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கருணாநிதி, சந்திரமோகன், இளையராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News