ஆன்மிகம்
கொங்கணாபுரம் அருகேகரட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா
கொங்கணாபுரத்தை அருகே கரட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்படி எளிமையாக நடைபெற்றது.
கொங்கணாபுரத்தை அருகே கரட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்படி எளிமையாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஊர் கிணற்று பகுதியில் இருந்து மாரியம்மன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர் கவுண்டர்கள் கரட்டூர் மணி, வெங்கடாசலம், வடிவேலு ஆகியோர் முன்னிலையில் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் கோவிலை 3 முறை சுற்றி வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கோவிலை 3 முறை சுற்றி வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.