ஆன்மிகம்
செல்லமுத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
கீழ்வேளூர் அருகே இரிஞ்சியூர் கிராமத்தில் செல்லமுத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீழ்வேளூர் அருகே இரிஞ்சியூர் கிராமத்தில் செல்லமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
இந்தநிலையில் நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.