ஆன்மிகம்
அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சன்னதியில் பால், பன்னீர், இளநீர், தயிர், மஞ்சள் உள்பட 9 வகையான அபிஷேகங்கள் ஆஞ்சநேயருக்கு நடந்தது.
அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சன்னதியில் பால், பன்னீர், இளநீர், தயிர், மஞ்சள் உள்பட 9 வகையான அபிஷேகங்கள் ஆஞ்சநேயருக்கு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தந்தார்.
முன்னதாக வடைமாலை, துளசி மாலைகள் சாத்தப்பட்டிருந்தது. அத்துடன் கோரிக்கைகள் அடங்கிய மாலைகளை பக்தர்கள் சாத்தினர். பின்னர் தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு வந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
முன்னதாக வடைமாலை, துளசி மாலைகள் சாத்தப்பட்டிருந்தது. அத்துடன் கோரிக்கைகள் அடங்கிய மாலைகளை பக்தர்கள் சாத்தினர். பின்னர் தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு வந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.