ஆன்மிகம்
மோகினி அவதாரத்தில் மலையப்பசாமியும், திருச்சி வாகனத்தில் கிருஷ்ணசுவாமியும் பக்தர்களுக்கு காட்சியளித்தது

பிரம்மோற்சவ விழா 5-ம் நாள்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவை

Published On 2020-10-21 02:39 GMT   |   Update On 2020-10-21 02:39 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாளில் காலையில் உற்சவர் மலையப்ப சாமி மோகினி அவதாரத்தில் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். மாலையில் கருடசேவை நடந்தது.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலையில் உற்சவர் மலையப்ப சாமி மோகினி அவதாரத்தில் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். மாலையில் கருடசேவை நடந்தது.

இதனை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமிக்கு தங்க, வைர நகை மற்றும் பட்டு வஸ்திரங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணி முதல் 8 மணிவரை கருடசேவை நடந்து. இதில் கோவில் அதிகாரி ஜவகர்ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News