ஆன்மிகம்
நவராத்திரி விழாவையொட்டி தேவூர் துர்க்கை அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி லட்சுமி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
விழாவில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு துர்க்கை அம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு துர்க்கை அம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.