தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வெங்கடேஸ்வரர் சாமி, பத்மாவதி தாயார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இங்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சாமி கோவிலில் வெங்கடேஸ்வரர் சாமி, பத்மாவதி தாயார் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இங்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு சீனிவாச பெருமாள் கோவிலில் பெருமாள் புஷ்ப அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்திற்குள் உபயதாரர்கள் இன்றி கருட சேவையும் நடந்தது.