ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

கடலூர் ராமாபுரம் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2020-09-28 03:23 GMT   |   Update On 2020-09-28 03:23 GMT
கடலூர் ராமாபுரத்தில் அய்யனாரப்பன் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கணபதி பூஜை, பிரவேச பள்ளி, வாஸ்து சாந்தியுடன் கும்பாபிஷேக விழா நடந்தது.
கடலூர் ராமாபுரத்தில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜை, பிரவேச பள்ளி, வாஸ்து சாந்தியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

பின்னர் நேற்று காலைகோ பூஜை, தன பூஜை, நவக்கிரக ஹோமமும், மாலை அங்குரார்பணம், ரக்சாபந்தனம், யாக சாலை பூஜை, கும்ப அலங்காரம், முதல் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு 2-ம் கால யாக சாலை பூஜை, வேதபாராயணம், நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடக்கிறது.

அதனை தொடர்ந்து 9 மணிக்கு கணபதி, சுப்பிரமணியர், வில்லுக்கட்டி பூர்ணகலா புஷ்பகலா உடனுறை அய்யனாரப்ப சாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு 8 மணிக்கு சாமி வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News