ஆன்மிகம்
மயூரநாதர்

மயூரநாதர் கோவிலில் புரட்டாசி வளர்பிறை அஷ்டமி

Published On 2020-09-26 05:42 GMT   |   Update On 2020-09-26 05:42 GMT
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயூரநாதர் கோவிலில் கால பைரவருக்கு புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயூரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் கால பைரவருக்கு புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றன. இதில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம.சேயோன் செய்திருந்தார்.
Tags:    

Similar News