ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகரிப்பு
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்தசில நாட்களாக கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆந்திராவில் கொரோனா தொற்று பரவலால் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் உத்தரவின்பேரில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதியில் இருந்து சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனினும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 1,500 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்து வந்தனர். ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் 500 பக்தர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தனர்.
கடந்தசில நாட்களாக கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு ஆந்திர மாநிலத்துக்குள் நுழைய இ-பாஸ் முறை இல்லாததால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 1,500 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்து வந்தனர். ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் 500 பக்தர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தனர்.
கடந்தசில நாட்களாக கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு ஆந்திர மாநிலத்துக்குள் நுழைய இ-பாஸ் முறை இல்லாததால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.