ஆன்மிகம்
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

மகாளய அமாவாசையையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

Published On 2020-09-18 05:05 GMT   |   Update On 2020-09-18 05:05 GMT
புரட்டாசி மாத பிறப்பும், மகாளய அமாவாசையும் நேற்று ஒரே நாளில் வந்தது. ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
புரட்டாசி மாத பிறப்பும், மகாளய அமாவாசையும் நேற்று ஒரே நாளில் வந்தது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும் மகாளய அமாவாசயையொட்டி பெரும்பாலானோர் தங்கள் முன்னோர்களுக்கு குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்தனர். அதுமட்டுமின்றி நேற்று பகலில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.
Tags:    

Similar News