ஆன்மிகம்
முத்தாரம்மன்

முத்தாரம்மன் கோவில் கொடை விழா

Published On 2020-08-13 08:32 GMT   |   Update On 2020-08-13 08:32 GMT
திசையன்விளை அருகே உள்ள முத்தாரம்மன், மாரியம்மன் கோவில் கொடை விழா கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் நடந்தது.
திசையன்விளை அருகே உள்ள குட்டம் ஆனந்தவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன், மாரியம்மன், சிவனணைந்த பெருமாள் கோவில் கொடை விழா ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் விழா நடந்தது.

முதல் நாள் காலையில் கும்பாபிஷேகம், மாலையில் கோவிலை சுற்றி முளைப்பாரி ஊர்வலம், இரவில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, 2-ம் நாள் மதியம் கோவிலில் மதிய பூஜை நடந்தது. கிராமிய நிகழ்ச்சிகளான வில்லுப்பாட்டு, கணியான் கூத்து ஆகியவையும் நடைபெற்றன. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News