ஆன்மிகம்
முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

நாமக்கல், பரமத்திவேலூர் பகுதி கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு

Published On 2020-08-13 05:24 GMT   |   Update On 2020-08-13 05:24 GMT
நாமக்கல், பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடி கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது.
நாமக்கல்- மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் ஆடி மாத கிருத்திகையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவசம் சாத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு முத்தங்கி சாற்றப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றவாறு சாமியை வழிபட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடிமாத கிருத்திகையையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவிலில் பாலசுப்ரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

இதேபோல பரமத்தி அருகே பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகர் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள பாலசுப்பிரமணியர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. 
Tags:    

Similar News