ஆன்மிகம்
ஏம்பலம் முத்துமாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

ஏம்பலம் முத்துமாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2020-08-12 05:26 GMT   |   Update On 2020-08-12 05:26 GMT
புதுவை மாநிலம் ஏம்பலத்தில் பிரசித்திபெற்ற முத்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
புதுவை மாநிலம் ஏம்பலத்தில் பிரசித்திபெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி மாத கடைசியில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் கோவிந்தராசு, செயலாளர் ராமதாஸ், பொருளாளர் சுப்பராயன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News