ஆன்மிகம்
நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் முன்பு விளக்கு ஏற்றி வழிபாடு

Published On 2020-08-06 08:52 GMT   |   Update On 2020-08-06 08:52 GMT
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் முன்பு ஆன்மிக வேள்வி உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக அமைப்புகளின் சார்பில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் முன்பு ஆன்மிக வேள்வி உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக அமைப்புகளின் சார்பில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முன்னாள் அறங்காவல் குழு தலைவர் பி.எஸ்.கே.செங்கோடன், டாக்டர் குழந்தைவேல், பேராசிரியர் அரசு பரமேஸ்வரன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஹரிஹர கோபாலன் மற்றும் குருவாயூரப்பன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டு, நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். 
Tags:    

Similar News