ஆன்மிகம்
சந்திரன்

சந்திர ஓரையில் செய்ய வேண்டியவை

Published On 2020-07-14 09:49 GMT   |   Update On 2020-07-14 09:49 GMT
பொதுவாக எந்த நற்காரியம் செய்யத் தொடங்கினாலும், அது வளர்பிறையா? சுப கிரக ஓரை வருகிறதா? என்று தினசரி காலண்டரில் பார்த்து செய்யத் தொடங்குவது நல்லது.
பொதுவாக ஒரு சுபகாரியம் தொடங்குவதற்கும், திருமணம், புதிய கட்டிட வேலை ஆகியவற்றுக்கும் பெரியவர்கள் ஓரை பார்த்து செய்வது நல்லது என்பார்கள். ‘ஹோரா’ என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்தது தான் தமிழில் ‘ஓரை’ என்றாகி விட்டது. ஓரை என்பது ஒரு மணி நேரத்தை குறிக்கும். இந்த ஓரையில் ஒவ்வொரு கிரகங்களின் பலன் இருக்கும். அதில் சுப கிரகங்கள் என்று அழைக்கப்படும் சந்திரன், புதன், குரு, சுக்ரன் ஆகிய 4 கிரகங்களின் ஓரை பார்ப்பது அவசியம்.

பெண் பார்க்கும் படலம் நடத்தும் பொழுது நல்லநேரம், ஓரை பார்த்து நடத்தினால் மனதிற்கினிய விதம் திருமணப்பேச்சு முடிவாகும். சந்திர ஓரையில் பெண் பார்க்கும் படலம் நடத்தினால் மிகவும் நல்லது. கோவிலில் வைத்துப்பார்ப்பதா? இல்லை அவரவர் வீட்டில் வைத்துப் பார்ப்பதா அல்லது பொது இடங்களில் பார்ப்பதா என்பதை அவரவர் சுயஜாதகத்தை வைத்து முடிவு செய்துகொள்ளலாம். சந்திர ஓரை, திருமணம் சம்பந்தமான முயற்சிகள் செய்யவும், பெண் பார்த்து முடிவு செய்யவும் உகந்தது. அன்றைய தினம் யோகமும் நன்றாக இருக்கவேண்டும்.
Tags:    

Similar News