ஆன்மிகம்
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி மலையடிவார கோவிலில் சிறப்பு பூஜை

வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி மலையடிவார கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2020-07-02 07:05 GMT   |   Update On 2020-07-02 07:05 GMT
வாடிப்பட்டி அருகே இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலையடிவாரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆதி வடிவுடையாள் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கையொட்டி வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. அதன்பின் 5 முறை ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. அதில் நேற்று முதல் கிராமங்களில் உள்ள கோவில்கள் திறந்து பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து வாடிப்பட்டி அருகே இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலையடிவாரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆதி வடிவுடையாள் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அப்போது கொரோனா தொற்று நீங்கவேண்டியும், உலக மக்கள் பூரண நலம் பெற வேண்டியும் பூஜைகள் செய்யப்பட்டது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பூசாரி முத்துகுமார் மற்றும் பலர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News