ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆழ்வார் திருநட்சத்திர விழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆழ்வார் திருநட்சத்திர விழா

Published On 2020-07-01 07:30 GMT   |   Update On 2020-07-01 07:30 GMT
பெருமாளுக்கே பல்லாண்டு பாடியவரும், ஆண்டாளின் வளர்ப்பு தந்தையுமான பெரியாழ்வாரின் திருநட்சத்திர விழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்தது.
பெருமாளுக்கே பல்லாண்டு பாடியவரும், ஆண்டாளின் வளர்ப்பு தந்தையுமான பெரியாழ்வாரின் திருநட்சத்திர விழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை பெரியாழ்வார் உற்சவ விக்கிரகம் ரெங்கநாதர் சன்னதிக்கும், தாயார் சன்னதிக்கும் கொண்டுவரப்பட்டு, ராமானுஜர் காட்டிய வழியில் மங்களா சாசனம் எனும் சிறப்பு வழிபாடு நடந்தது.

அப்போது பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் நலமுடன் இருக்க சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளை கோவில் அர்ச்சகர்கள், கைங்கர்யபரர்கள் நடத்தினர். ஊரடங்கு காரணமாக பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலையிலும் ஆழ்வார் திருநட்சத்திர நிகழ்வுகள் முறைப்படி நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News