ஆன்மிகம்
காட்டழகிய சிங்கர் கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு ஆனி திருமஞ்சனம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கர் கோவிலில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு லட்சுமி நரசிம்மருக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் லட்சுமி நரசிம்மருக்கு ஆனி திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெறும்.
நேற்று ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் என்பதால் லட்சுமி நரசிம்மருக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து கோவில் யானை ஆண்டாளும், கோவில் பணியாளர்களும் வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவந்தனர்.
பின்னர் புனிதநீர் மூலம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பெருகிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகள் நீங்கவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்று ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் என்பதால் லட்சுமி நரசிம்மருக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்காக கொள்ளிடம் ஆற்றில் இருந்து கோவில் யானை ஆண்டாளும், கோவில் பணியாளர்களும் வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவந்தனர்.
பின்னர் புனிதநீர் மூலம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை லட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பெருகிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகள் நீங்கவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.