ஆன்மிகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி

சாமிதோப்பு வைகாசி திருவிழா: தேரோட்டம் இல்லாமல் எளிமையான முறையில் நடந்தது

Published On 2020-06-02 07:03 GMT   |   Update On 2020-06-02 07:03 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொரோனா பாதிப்பை முன்னிட்டு அரசின் அறிவுறுத்தலின்படி தேரோட்டம் இல்லாமல் எளிமையான முறையில் நடைபெற்றது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 11-ம் நாள் திருவிழா கொரோனா பாதிப்பை முன்னிட்டு அரசின் அறிவுறுத்தலின்படி தேரோட்டம் இல்லாமல் எளிமையான முறையில் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து நடை திறந்து அய்யாவுக்கு பணிவிடையும், பகல் 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது.

பணிவிடைகளை பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி ஆகியோர் செய்தனர். தலைமைப்பதியின் முன்பு அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதர்மம் வழங்கப்பட்டது. திருவிழா நாட்களில் நடைபெறும் வாகனபவனி நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
Tags:    

Similar News