ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம்

சிதம்பரம் நடராஜருக்கு உகந்த அபிஷேகப் பொருட்களும் பலன்களும்

Published On 2020-06-01 09:09 GMT   |   Update On 2020-06-01 09:09 GMT
சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களும், அதனால் கிடைக்கும் பலன்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிதம்பரம் நடராஜருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களும், அதன் பலன்களும் வருமாறு:-

சந்தனா தைலம் - சுகம் தரும்
நல்லெண்ணை - விஷசுரம் நிவர்த்தி
பால் - தீர்க்காயுள் தரும்
தயிர் - நன்மக்கட்பேறு
தேன் - இனிய குரல்வளம் தரும்

நெய் - வீடுபேறு அடைய உதவும்
சர்க்கரை-எதிரிகள்தொல்லை நீங்குதல்
பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்
மாம்பழம் - வெற்றியைத் தரும்
கரும்புசாறு - நல்ல உடல் நலம்

இளநீர் - போகம் அளிக்கும்
எலுமிச்சம்பழம்-சகலபகையை அழிக்கும்
அன்னம் - சகல பாக்கியங்களும் தரும்
பன்னீர் - புகழ் சேர்க்கும்
சந்தனம் - செல்வம் உண்டாகும்

நறுமணப்பொடி - கடன், நோய் தீரும் ஆண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், பெண் தெய்வமூர்த்திக்கு நறுமணப் பொடியும், மஞ்சள்தூளும் அபிஷேகம் செய்ய வேண்டும்.

மஞ்சள் தூள் - மங்களம் அளித்திடும்
விபூதி -கர்மவினைகளை நீக்கி மோட்சம் அளிக்கும்
சொர்ணாபிஷேகம் - ஐஸ்வர்யம் வரும்

ஒவ்வொரு அபிஷேகத்தின் இடையிலும் சுத்தநீர் பயன்படுத்த வேண்டும் அது நம் மனதுக்கு அமைதியை தேடி தரும்.
Tags:    

Similar News