ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்

Published On 2020-05-29 08:28 GMT   |   Update On 2020-05-29 08:28 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றதை அடுத்து தீபாராதனையும், புனிதநீர் மூலம் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் 108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகம் நடந்தது.

அதைத் தொடர்ந்து கலசங்கள் வைத்து மகா யாகம் நடந்தது. பின்னர் அருணாசலேஸ்வரருக்கு தீபாராதனையும், புனிதநீர் மூலம் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. 
Tags:    

Similar News