ஆன்மிகம்
கண்ணமங்கலம் அருகே சின்னப்புத்தூர் மாரியம்மன் கோவில் விழா ரத்து
தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சின்னப்புத்தூர் கிராமத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கண்ணமங்கலம் அருகே சின்னப்புத்தூர் கிராமத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. சிறிய கோவில் என்றாலும் ஆண்டுதோறும் இங்கு வைகாசி 3-ம் வெள்ளிக்கிழமை நடைபெறும் கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சக்தி படைத்த இந்த மாரியம்மன் கோவில் விழாவில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள்.
ஆனால் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என கோவில் செயல் அலுவலர் சிவாஜி மற்றும் கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் பக்தர்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஆனால் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என கோவில் செயல் அலுவலர் சிவாஜி மற்றும் கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் பக்தர்கள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.